போர் -உப-தேசம்-----அஹமது அலி-----

எதிரியை வெல்வது
யாருக்கும் எளிது
அவன் எண்ணத்தை வெல்வது
அறிஞனுக்கும் அரிது!

-0-0-0-0-

அகிம்சை சிறப்பான
ஆயுதம் தான்
அது உன் உயிர் போவதை
பார்த்துக் கொண்டிருக்காதவரை!

-0-0-0-0-

களம் காணும் முன்னே
உறவாடிக் கொள்
களம் கண்ட பின்
உறவானாலும் கொல்!

0-0-0-0-

வீரன் பெரும்படை கண்டும்
தொடை நடுங்குவதில்லை
கோழை வென்ற போதிலும்
வீரத்தை வெல்வதில்லை!

0-0-0-0-

தோல்விக்கு பிந்தைய
சமாதானத்தை விட
போருக்கு முந்தைய
சமாதானம் சாலச் சிறந்தது!

எழுதியவர் : அலிநகர். அஹமது அலி. (23-Jun-14, 9:17 am)
பார்வை : 516

மேலே