சனீஸ்வரன் கோவில்

நம்பினால் நம்புங்கள்... சேட்டிலைட்டையை மிரட்டும் சனி ஸ்தலம்

செயற்கை கோள்களை இன்று பல நாடுகள் விண்வெளிக்கு போட்டிப்போட்டுக்கொண்டு அனுப்பி வருகின்றன. செல்போன் பயன்பாடு,ராணுவ பயன்பாடு, உளவு என பல்வேறு காரணங்களுக்காக அவைகள் பயன்படுத்தப்படுகிறது.

சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கை கோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் போது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்து பின்னர் வழக்கம் போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. இதனால் எந்த வித பழுதும் செயற்கை கோளில், அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை.

இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை அளித்தது. இது எப்படி சாத்தியம்??? - என்பதற்கான ஆராய்சியில் கிடைத்த முடிவுவை நாசா ஏற்றுக் கொண்டதாக இருந்தாலும் அது உலகையே மிரள வைத்தது,

தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பநேஷவரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான் பகுதியை கடக்கும் எந்த ஒரு செயற்கை கோளும் 3 வினாடிகள் மட்டும் ஸ்தம்பித்து விடுகின்றன என்பது தான் அது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கரு நீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்துகொண்டே இருக்கிறது என்பதும் ஆராய்ச்சியில் வெளியாகி இருப்பதாக கூறப்படுகிறது,

இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் பொது இந்த கரு நீல கதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கை கோள்கள் இந்த கருநீல கதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும் போது ஸ்தம்பித்து விடுகின்றன. அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்த கோவில் தான் இந்துக்களால் சனி பகவான் தலம் என்று போற்றப்படும் திருநள்ளாற

இந்த சம்பவத்திற்கு பிறகு அமெரிக்காவின் நாசாவிலிருந்து பல முறை திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்து விட்டனர். ஆனால் இன்று வரை விண்ணில் செயற்கை கோள்கள் திருநள்ளாறு பகுதியை கடக்கும் போது மட்டும் ஸ்தம்பித்து கொண்டே இருக்கிறதாம்.

இந்த செய்தியை கேட்டு பிரமிக்காதவர்கள் நம்முடைய முன்னோர்களை நினைத்து கட்டயம் பிரமிக்க வேண்டும். செயற்கை கோள்கள் கொண்டு கண்டறியும் சனி கோளின் கதிர் வீச்சு விழும் பகுதியை கண்டு பிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர் வீசுகள் அதிகம் விழும் நாளையும் கணக்கிட்டு அதற்கான நாளை சனி பெயர்ச்சி என்று அறிவிக்கும் திறமையை,நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒரு தொலை நோக்கு பார்வை கொண்ட நம் முன்னோர்களை நினைத்து பிரமிக்காமல் இருக்க முடியவில்லை.மொத்தத்தில் நமது முன்னோர்கள் நம்மை விட கில்லாடிகள் தான்!!!!

எழுதியவர் : கவியரசன் (24-Jun-14, 6:31 am)
பார்வை : 194

மேலே