எம்ஜியாரு குழந்தைப்பாடல்

எம்ஜியாரு(குழந்தைப் பாடல்)



எம்ஜியாரு எம்ஜியாரு--அவர்

எங்கே வாழ்கிறாரு?—தமிழ்

எங்கே வாழ்கிறதோ—அவர்

அங்கே வாழ்கிறாரு.



தமிழ் பேசும் இதயங்களில்

கனியாகத் தானே—அந்தக்

கனியோடு பசுமையான—தளிர்

இலையாகத் தானே.

எம்ஜியாரு எம்ஜியாரு--அவர்

எங்கே வாழ்கிறாரு?—தமிழ்

எங்கே வாழ்கிறதோ—அவர்

அங்கே வாழ்கிறாரு.



சின்னச் சின்னப் பிஞ்சான

எண்ணங்களில் தானே-சத்து

அன்னமிட்ட நெஞ்சமான--கல்வித்

தந்தையாகத் தானே.

எம்ஜியாரு எம்ஜியாரு--அவர்

எங்கே வாழ்கிறாரு?—தமிழ்

எங்கே வாழ்கிறதோ—அவர்

அங்கே வாழ்கிறாரு.



ஏழை அவன் சிரிப்பினிலே

இறைவனாகத் தானே-என்றும்

வாழும் வழி காந்தியான--குடிசை

ஒளியாகத் தானே.

எம்ஜியாரு எம்ஜியாரு--அவர்

எங்கே வாழ்கிறாரு?—தமிழ்

எங்கே வாழ்கிறதோ—அவர்

அங்கே வாழ்கிறாரு.



தர்மனாக வாழ்ந்த தமிழ்

தங்கத் தலைவரு—வாழ்வில்

தனக்கென வாழாக் கர்ணக்

கொடை வள்ளலே

எம்ஜியாரு எம்ஜியாரு--அவர்

எங்கே வாழ்கிறாரு?—தமிழ்

எங்கே வாழ்கிறதோ—அவர்

அங்கே வாழ்கிறாரு.



புரட்சி எனும் சொல்லுக்கான

புகழ் அவர்தானே—தமிழில்

வறட்சி எனும் சொல்லொழித்த

வாத்தியார் தானே.

எம்ஜியாரு எம்ஜியாரு--அவர்

எங்கே வாழ்கிறாரு?—தமிழ்

எங்கே வாழ்கிறதோ—அவர்

அங்கே வாழ்கிறாரு.



எம்ஜியாரு தானே சினிமா

என்பதுதானே நிசமா--இன்றும்

அவர்தான் சூப்பர் ஸ்டாரு

என்பதுதானே பேறு.

எம்ஜியாரு எம்ஜியாரு--அவர்

எங்கே வாழ்கிறாரு?—தமிழ்

எங்கே வாழ்கிறதோ—அவர்

அங்கே வாழ்கிறாரு.



கொ.பெ.பி.அய்யா.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா. (27-Jun-14, 9:46 am)
சேர்த்தது : கொ.பெ.பி.அய்யா.
பார்வை : 103

மேலே