அந்நியமாய் மீண்டும் வருக
காற்றாய் வியாபிக்கிறாய் !
கனவுகளோடு
கலந்து வருகிறாய் !
மின்னல் கீற்றாய்
அவ்வப்போது மிளிர்கிறாய் !
சில பொழுதில்
மலையாய் பிரமிக்கிறாய் !
சில சமயம்
சிந்தைக்குள்
மருந்தாய் கசக்கிறாய் !
சில கணம்
சுவாசத்தினுள்
இனிப்பாய் இருக்கிறாய் !
பகற்பொழுதினில்
பனி போல் தழைகிறாய் !
மாலையாய் கழுத்தினிற்
விழுகிறாய் !
அமுதமாய் பூரிக்கிறாய் !
சிறகடித்து சிலிர்க்கிறாய் !
ஆனாலும்..
எங்கோ போய் விடுகிறாய்...
அந்நியமாய்...
அவ்வப்போது...
மீண்டும் வருவேன் என்ற
உணர்த்துதல்களோடு... !