எங்கெல்லாம் ஓடுவதோ

எங்கெல்லாம்
ஓடுவதோ .............!
ஒருவரும்
தேற்றவில்லை எம்மை......?

இருந்திருந்தால்
முடிந்திருப்போம்
என்றுதான்
எழுதினால் புரியுமா உனக்கு??????

இரத்தங்கள்
சிந்திய சேற்றில் –இனி
இனிதாகுமா..........
எங்கள் வாழ்வேதான்...

பசியோடுதான்
நாமீங்கே வந்தோம்
பலர் ஏக்கத்தொடுதான் அங்கே????

அலையோடு.........
படகேறி –பலர்
அகதிதான் என்றாலும்
இன்னும்
வெந்தணலில் சிக்கிய மீனாய்
வெந்துதான் வாழ்கிறோம்மா......!

கனவுதான்
கான்கிறோமோ –இல்லை
கண்டங்களில்
தாகசாந்தியா புரியவில்லை......?

சத்தியமான
வார்த்தை நண்பா –புது
சரித்திரத்தை புரட்டிபோடலாமே......!

இலக்கியத்தில் புதுமைகள் பல
இசைமெட்டாய் பாடிடலாம் –புதிய
புலம்பெயர் தமிழாராய் இன்னும்
புதுமைகள் பாடிடலாம் நாமே.....?

எழுதியவர் : விளைபூமி துஷி (30-Jun-14, 7:19 am)
பார்வை : 116

மேலே