நட்சத்திர விதைகளை காக்க

நட்சத்திர விதைகளை காக்க

வானவெளி வயல்களில்
ஊன்றி விதைக்கப்பட்ட
நட்சத்திர விதைகள்

விளைந்து பயிராகும்
முன்
எவராலும் களவாட
படாமல் இருக்க

இரவும் பகலும்
சுற்றி வந்து
காவல் காக்க

சூரியனையும்
நிலவையும்
நியமித்தது ஏனோ?

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (24-May-25, 12:05 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 13

சிறந்த கவிதைகள்

மேலே