என் பிரதி பின் மறதி

கவிதை எழுதிய என் பேனா
என்னாலே
உடைத்து எறியப்பட்டது
மரணத் தீர்ப்பின் பேனாபோல்

கவிதை தாங்கிய என் காகிதம்
என்னால்
கிழித்து எறியப்பட்டது
திருப்பி வாங்கிய காசோலைபோல்

கவிதை உதித்த என் மனது
என்னால்
மறக்கச் செய்யப்பட்டது
மனநோய்க்கு வசீகர தத்துவம்போல்

எழுதியது போன்று எழுதக்
கூடாது என்று
புதுப்பேனா புதுக்காகிதம் புதுமனது
முச்சேர்க்கையில் ஒரு புதுப்பிரசவம்
வலியோடு அடுத்த கவிதை

எழுதியவர் : மது மதி (29-Jun-14, 11:54 pm)
பார்வை : 78

மேலே