காற்றை மிதிக்காமல் நடக்க முடிவதில்லை

காற்றை
மிதிக்காமல்
நடக்க முடிவதில்லை
========================
முகம் பார்க்கும்
கண்ணாடியில்
வெறுமையை யாரும்
பார்த்ததில்லை
=======================
பந்தில் பட்டு
திரும்பி வந்தது
சுவர்
========================
இனிப்பு,
எறும்புகளின்
வேடந்தாங்கல்
வேடந்தாங்கல்,
பறவைகளின்
இனிப்பு
========================
உடல் எனும்
ஆடையை
வெயிலில் காயப்போட்டேன்
அது
உலரவேயில்லை
========================
பூமியை
உருட்டுகினறன
கால்கள்
========================
மழை விட்டதும்
மரத்துக்கு
தலைதுவட்டியது
காற்று
========================
இருட்டைப்
போர்த்திக்கொண்டு
வெளிச்சம் உறங்குகிறது
இரவில்
வெளிச்சத்தைப்
போர்த்திக்கொண்டு
இருட்டு உறங்குகிறது
பகலில்
( நன்றி : " ஆடாத மரத்தை காற்று பார்த்ததில்லை " - என்ற தேவதச்சனின் வரிகளுக்கு )