மீண்டும் வானம்பாடி
![](https://eluthu.com/images/loading.gif)
கால் கடுக்க நிக்கிறேங்க தண்ணீருக்கு
வந்த வண்டி போயிருச்சு மாளிகைக்கு
குடிக்க கூட தண்ணியில்ல எங்களுக்கு
என்ன பாவம் செஞ்சமுங்க பகவானுக்கு
தண்ணிக்காக அலையிறமே தெருத் தெருவா
தண்ணிக்குழாய் ஆயிடுச்சே துருத் துருவா
குடிகெடுக்கும் தண்ணிக்கடை தெருவுக் கொன்னா
குடிகாக்கும் தண்ணீர்தர யார் இருக்கா
குளம் குட்டை வத்திடுச்சே வயிறுபோல
நிலம் எல்லாம் காய்ஞ்சிடுச்சே மனசுபோல
மரம் எல்லாம் வெட்டிவிட்டோம் உறவுபோல
தண்ணி போச்சு உசுறுமட்டும் ஒட்டிக்கிச்சு
இருப்பவன் பணம் கொடுத்தே வாங்கிக்கிறான்
இல்லாதவன் எங்கே போவான் சொல்லிடுங்க
தாகம் தீர்க்க தண்ணீர்மழை பொழிந்திடுமோ
மீண்டும் வானம்பாடி வாழ்வில் வந்திடுமோ