ஒரு சில மத்தாப்பு

சிலரோடைய பேச்சு அழகு
சிலரோடைய பார்வை அழகு
சிலரோடு கைகோர்க்க ஆசை
இவரோடு வாழ்ந்திடவும் ஆசை
மொட்டுக்கள் மீது விழுந்த பனித்துளியும்
பூக்களிருந்து விழுந்த பூ இதழும்
பார்க்கின்ற நேரங்களில் வருகின்ற சந்தோஷமும்
சிறு குழந்தையின் துள்ளலில்
அம்மாவின் ஆக்ரோசமான ஆனந்தமும்
பறவைமீது நம்கைபட்டு
அது பறந்து செல்கின்றபோது வருகின்ற ஆனந்தமும்
முதன் முதலாக பேசும் காதலின் உற்சாகமும்
அதை மறைமுகமாக நினைத்து மகிழும் முக அழகும்
தொலைவாக தெரியும் வானவில்லை
அதை தொட்டுவிட முயற்சிக்கும் சிறுவர்களும்
விடாத மழையில்
மெல்ல நடைபலகும் வாத்தும்
தொட்டு விடாத ஒரு பார்வை
கொட்டி விடாத வார்த்தை
தித்திப்பு இல்லாமலே ஒருவித இனிப்பும்
ஒருவரின் ஆசையை
அவரின் பார்வைக்கு தெரியாமல்
அவரின் ஆசையை நிறைவேற்றும் பொழுதும்
இவையாக நான் பார்த்த
ஒரு சில மத்தாப்பு
என் உள்ளத்தில் உணர்வுகளாக..,