மருத்துவன்

மருத்துவன்

வானுக்கும் மண்ணுக்குமான
திரவத் தொடர்பு
மழை....

மனிதனுக்கும் நோய்க்குமான
மானுடத் தொடர்பு
மருத்துவன்...

மழை மண்ணையும்
சாக்கடைகளையும்
சலவை செய்கிறது

மழைச் சேவையின்
பரிபூரணம் பூமியெங்கும்
பூத்துக்குலுங்குவதில்

மருத்துவச் சேவையின்
பரிபூரணம் மானுடத்தின்
சனி(பிணி)ப் பெயர்ச்சியில

எறும்பு ஊரும் தொலைவை
அளப்பதில்லை,சோம்பேறியாய்
ஒரு போதும் உறங்குவதில்லை

சேவையில் நம்மைக்
கலந்திடுவோம்.

சேற்றில் விழுந்தாலும்
முளைத்திடுவோம்

எச்சில் விழுங்கும் எவனும்
எதிரியை வீழ்த்தியதில்லை

தன்னலம் காத்தவன்
என்றுமே வாழ்ந்ததில்லை

கைகோர்ப்போம் நம் கரங்களால்
நோயின்றி மானுடம் அமைப்போம

சேவையே வாழ்வின் உயிர்த்துளி என
உறுதியாய் முரசு கொட்டுவோம்....

தாஸ்

எழுதியவர் : தாஸ் (15-Jul-14, 10:54 pm)
சேர்த்தது : வைரமுத்து தாசன்
Tanglish : maruthuvan
பார்வை : 88

சிறந்த கவிதைகள்

மேலே