கனவும் இலட்சியமும்

எண்ணம் 6753-ஐப் படித்தபோது தோன்றியது.....

நினைக்கா தெழுவது நீள்துயில் கொடுப்பது
முனைவ தில்லா மூளையின் முடிச்சது!
கனவென வருவது; கற்பனை கடந்தது!
உள்மனத் தாசையின் ஒளியொலிக் காட்சி!
சிலநாள் இருந்தால் சில்லறை ஆசை!
பலமாய் மனதுள் படிந்து குழைப்பிப்
பலவழி தேடிப் பயன்பெற விழைந்தால்
நலமத னாலே நம்மையும் கடந்து
நாலுபேர் பயனைக் கொடுக்க
ஏலுமேல் அதனை இலட்சியம் என்பமே!

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (17-Jul-14, 6:34 pm)
பார்வை : 633

மேலே