வெண்டுறை 34

வெண்டுறை இரண்டு ..

பட்டாம் பூச்சிக்கு ...

பட்டுச் சிறகை விரித்து வானில்
பட்டாம் பூச்சி பறக்கும் போழ்து
பிடித்து அதனை தொட்டுப் பார்க்கத்
தோன்றிய தாசை மனதில்

தொட்டதும் விரலால் துடித்திடப் பூச்சி
சுட்டது நெஞ்சம் குற்றம் கூறி
விரிந்ததும் சேர்ந்த விரல்கள் இரண்டும்
பறந்தது பட்டாம் பூச்சி

எழுதியவர் : வெங்கடாசலம் தர்மராஜன் (20-Jul-14, 2:31 pm)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 46

மேலே