சுயமதிப்பீடு

ஒரு பையன் டெலிபோன் பூத்திற்கு சென்று ஒரு நம்பருக்கு டயல் செய்தான். அந்த டெலிபோன் பூத் அருகில்இருந்த ஒரு கடையின் cash கவுன்ட்டர் பக்கத்தில் இருந்தது. அந்த கடை முதலாளி அந்த பையன் பேசுவதை கேட்டு கொண்டு இருந்தார்.பையன் : "மேடம்,உங்கள் தோட்டத்தை பராமரிக்கும் வேலையை கொடுக்க முடியுமா?பெண்மணி (எதிர் பக்கத்தில் பேசுபவர் ):எனது தோட்டத்தை ஏற்கனவே ஒருவர் பராமரித்து வருகிறார்.பையன்:"மேடம் அவருக்கு கொடுக்கும் சம்பளத்தில் பாதி சம்பளம் கொடுத்தல் போதும், நான் உங்கள் தோட்டத்தை பராமரித்து தருகிறேன் "பெண்மணி : இல்லை. இப்பொழுது பராமறிப்பவரின் பராமரிப்பில் தோட்டம் நன்றாக உள்ளது. நானும் அவர் வேலையில் மிகவும் திருப்தி அடைகிறேன்"பையன் :(இன்னும் பணிவோடு),மேடம் நான் உங்கள் வீட்டை பெருக்கி துடைத்து கூட தருவேன்.அதற்க்கு தனியாக எனக்கு சம்பளம் வேண்டாம் .பெண்மணி : "வேண்டாம் நன்றி "அந்த பையன் முகத்தில் சிரிப்போடு டெலிபோன் ரீசிவரை வைத்துவிட்டு திரும்பினான்.அந்த கடை முதலாளி அவனிடம் எனக்கு உன்னுடைய அணுகுமுறை,தோல்வியையும் சிரித்த முகத்தோடு எதிர் கொள்ளும் விதம் பிடித்து இருக்கிறது. நான் உனக்கு வேலை தருகிறேன் ,வருகிறாயா என்றார்பையன் : நன்றி,எனக்கு வேலை வேண்டாம் !!!!!!!கடை முதலாளி : இவ்வளவு நேரம்வேலைக்காக மன்றாடி கொண்டு இருந்தாய் !பையன் :"இல்லை சார்,நான் நன்றாக வேலை செய்கிறேனா என்றுதெரிந்து கொள்ளத்தான் இப்படி செய்தேன். அவர்களிடம் வேலை செய்யும் தோட்டக்காரன் வேறு யாருமல்ல ,நான்தான்..!இதற்கு பெயர்தான்" சுய மதிப்பீடு!!!
நன்றி♥♥♥