வெண்ணிலாவே

வீட்டில் எரிய வைப்பதற்கு
விளக்கில்லை
என்பதனால் தான் வெளியே
வந்தோம் வெண்ணிலாவே!....
ஆனால் உன்னையும் கூட
கரும் மேகங்கள் திறையிட்டு
மறைத்து விட்டதே!.....
ஏன் ஏழை என்றால்
உனக்கும் கூட
இஷ்டமில்லையா
வெண்ணிலாவே..?

எழுதியவர் : கலேவெல நசீம் (24-Jul-14, 2:30 pm)
சேர்த்தது : முஹம்மது நசீம்
பார்வை : 49

மேலே