பாசம்

ஏழு வருடத்திற்குப் பிறகு வெளிநாட்டிற்கு படிக்க சென்ற மாமன்மகள் அன்னக்கொடி, இன்று தன் உயிருக்கு உயிரான அத்தைமகனை(ஆட்டுக்கார மாமன்) சந்திக்க வருகிறாள். மாமனை கண்டதும் கட்டியணைத்து முத்தமிட்டு தழுவுகிறாள். தன் மாமனின் கவிதையை மிகவும் நேசிக்கும் அவள் தன் மாமனிடம் கவிதை சொல்லச்சொல்லி கட்டளையிடுகிறாள்.. தன் தாயின்மீது எல்லை இல்லா அன்பை வைத்த அவன் தன் தாயை பற்றியே கவிதை வடிக்கிறான் மாமன்மகளிடம்.. அவர்கள் இருவரும் சந்தித்த இடமும் புதிது. இந்த கவிதையின் முடிவும் புதிது..
என் மாமன்மகளே இதோ என் தாயைப் பற்றி கவிதை சொல்கிறேன் கேள்....

பாசம்:
அடி ஆத்தீ!!
அவ அடங்காத் தீ.
என்ன ஆளும்மரம்!!
அந்த ஆலமரம்.
என் தகப்பன பிரிஞ்சும் அழவில்ல,
என் தாய மிஞ்ச ஆளே இல்ல..
இருந்தும்,
நிலாச்சோறு உண்டதில்ல
அந்த "நிலாவே" ஊட்டியதால்..
அம்மாடியோ!!
என் அம்மா மடியோ
அழுக்குப் புடிச்சிருந்தாலும் ,
எனக்கு,
அதில் தூங்கத்தான் புடிச்சிருக்கு.
அதில் நெருப்பு புடிச்சாலும்
நிரந்தரமா படுத்திருப்பேன்.
அடியே அன்னக்கொடி!!
என் ஆத்தா,
அழுக்குப் படிஞ்சாலும், வெள்ளிக்கொடி.
அவ அழுக்கும் இனிக்கும் வெல்லமடி,
விலைபோகும் ஆறுக்கோடி.
என் அம்மாஆசை
முகம் பாத்தா
அம்மாவசையும் ஒளிரும்.
சித்திரை மாசமும் குளிரும்.
எதையும்,
"ஒத்தக் காலுல" நின்னு சாதிப்பா.
உண்மையில அவ
"ஊனமுற்றோர்" சாதியப்பா..
ஊனமுள்ள மனுசியினு,
ஊருசனம் பாக்கலையே..
ஊரவிட்டு ஒதுக்கிவச்சும்,
உங்க அப்பன் ,
ஒரு வார்த்தக் கேக்கலையே..
அனாதையா நிக்கையிலே,
அண்ணங்காரன் வருவான்
ஆதரவு தருவானு
நம்பியிருந்தா என் தாயி.
நம்பவச்சி கழுத்தறுத்த
உங்க அப்பன் ஒரு நாயி.
ஊருக்குள்ள அவ வந்தா
வெளங்காம போயுடுமாம் ஊரு..
இந்த ஊரு மக்களுக்கு
விலங்குன்னு பேரு..
விலங்கினம் கூட
நொடிப் பொழுதில் கொல்லுமம்மா..
இந்த ஊர் விலங்கினமோ!!!
நோகடிச்சே கொல்லுதம்மா..
சோலக்கிளி என்ன வளக்க
கிழிஞ்ச சே(சோ)ல கட்டி அ(ய)வ
வரப்பு வெட்ட போனாலோ???
வரம் வாங்கி போனாலோ??
தெரியவில்ல.
வாரம் ஆகியும்,
அவ வரவில்ல.
அவ தந்த விலாசம் எனக்கிருக்கு.
அந்த கைலாசம் எங்கிருக்கு??
அங்கதான் என் சாமி(ஆத்தா) உசுரிருக்கு..
அவ இருந்த நாள்முதல்
என் காலுக்கும், பூமிக்கும் பந்தமில்ல.
அவ இறந்த நாள்முதல்
இந்த பூமிக்கே நான் சொந்தமில்ல.
அவளத் தேடி நான் போக,
என்னத்தேடி ஏன்டியம்மா
நீ வந்த ஆவியாக..
ஏழுவருசம் வெளிநாடு போனவளே.
ஊரு எட்டியதும், உசுரவிட்டவளே.
இந்த ஆட்டுக்கார மாமன்
என்னடி செஞ்சா உனக்காக??
என் மாமன்மகளே!!
ஏன்டியம்மா,
உசுரவிட்ட எனக்காக???
சொல்லுறேன் மாமனே,
உன் தாயிக்காக
உசுர நீ கொடுத்த.
என் தாயிக்காக
என் உசுர நான் கொடுத்தேன்.
என் ஆத்தாளே
ஆட்டுக்கார மாமன் நீ தானே...
இடுகாடு ஒன்னிருக்கு,
இங்கு ஏராளம் பிணமிருக்கு.
அதில் இரு பிணங்கள் தான்
அந்த அன்னக்கொடியும்,
ஆட்டுக்காரனும்.
இறந்து போய்
அதை,மறந்து போய்
ஆவிகாளாய்,
பாசம் மிக்க பாவிகளாய் அந்த
இடுககாட்டில் இளைப்பாறுகிறார்கள்..
அவர்கள் சந்தித்த இடுமும் இதுதான்.
இந்த கவிதையின் முடிவும் இதுதான்..

எழுதியவர் : இராகுல்சாரதி (28-Jul-14, 10:19 pm)
Tanglish : paasam
பார்வை : 311

மேலே