காற்று-தென்றல்-புயல்

சொல்லிவிட்டுப்போன பகல்
சொல்லாமல்போன இரவு
கல்லாய்ப்போன மனசு
சொல்லமறந்த உறவு
என்ன வாழ்கை
....
அர்த்தமில்லாமல் விட்ட மூச்சு
ஒரு..ஏக்கத்தின் வெளிப்பாடோ
உண்மையாகவும் இருக்கலாம்
மூச்சுகள் கவனம்
அடுத்தவரை
சூடேற்றாமல் இருக்கட்டும்
...
காற்றுத்தான் புயலாகும்
காற்றுகள்..
தென்றலாகவே இருந்திட்டுப்போகட்டும்
வாழ்ந்துவிட்டுபோவோம்
புயல்கள்
கடலுக்குள்ளேயே சுழலட்டும்
மூச்சுகள்...பெருமூச்சாய் இல்லாமல்..

எழுதியவர் : எம் சீ யே.பரீத் (4-Aug-14, 9:57 pm)
பார்வை : 160

மேலே