இணைந்திட்டு இரண்டு ஆண்டு

அன்பு எழுத்து தள நண்பர்களுக்கு ,

இன்றோடு நான் தளத்தில் அடிபதித்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்தன . மிக்க மகிழ்ச்சி.

கவிதை எழுதும் பழக்கம் இருந்தாலும் , இங்கு வருவதற்கு முன்னரே 200 கவிதைகள் மேல் எழுதி இருந்தாலும் , சேமிப்பிலும் இல்லை ...தாள்களிலும் இல்லை...அந்த எண்ணமும் அப்போது தோன்றவும் இல்லை .

உண்மையில் நான் எண்ணிக்கையில் பார்த்தால் 1000 கவிதைகள் கடந்து விட்டேன்.

ஆனால் எழுத்து தளத்தை கண்டவுடன் அதில் பதிவிட வேண்டும் என்ற எண்ணம் வந்தவுடன் , எழுத ஆரம்பித்து இந்த அளவு கவிதைகளும் எழுதி ( பல கவிதைகள் இங்கே பதிவிடவில்லை , இன்னும் ) .

ஒரு அருமையான நட்பு வட்டமும் கிடைத்து எனக்கு மகிழ்ச்சியே , பெருமையே.
வாசகர்களும் அதிகள் அளவில் இருப்பார்கள் என்றே நினைக்கிறேன் என் கவிதைகளை.

அத்தனை பெருமையும் இந்த தள நிர்வாகிகளுக்கே சாரும் .

இந்த அருமையான நேரத்தை உங்களிடம் பகிர்வதில் பெரிதும் உவகை அடைகிறேன் .
இங்கே என்னை வழிநடத்தி செல்லும் வயதில் மூத்தவர்களுக்கும் , என்னை அரவணைத்து செல்லும் என் நிலை கவிஞர்களுக்கும் , என்னை வாழ்த்திடும் இளம் தலைமுறைக்கும் , அன்புள்ளம் கொண்ட சகோதர சகோதரிகளுக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன் .

நான் எவர் பெயரையும் தனியாக குறிப்பிடவில்லை காரணம் இடமும் காலமும் போதாது.
யாரும் வருந்த வேண்டாம் அதற்காக. அனைவரும் என் இதயத்தில் என்றும் உள்ளீர்கள் .

அனைவரையும் வரும் அக்டோபர் மாதம், சென்னையில் நடைபெறவுள்ள , என் முதல் கவிதை தொகுப்புகளின் நூல் வெளியீட்டு விழாவில் சந்திக்கறேன் . நான் உடல்நிலை காரணமாக அதிகம் வெளியில் செல்வதும் இல்லை. அதனால் ஆர்வமாக உள்ளது அனைவரையும் சந்திக்க .

மீண்டும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி .

எழுதியவர் : பழனி குமார் (7-Aug-14, 3:19 pm)
பார்வை : 329

மேலே