புதிர்

காலையில் கண்களுக்கு தென்படாத விண்மீன்கள்
இரவில் வானத்தை முற்றுக்கையிடுகின்றன.
பகலில் பார்வையிழந்து
பொந்தினின்று நகராத ஆந்தைகள்
இரவில் இருளை மீறி வேட்டையாடுகின்றன.
வீடு எல்லை பாதுகாப்பிலுள்ள பூனைகளிடம் அகப்படாத எலிகள்
இரவில் தனி ராஜ்ஜியம் நடத்துகின்றன.
இது போல்
இன்னும் பல விசித்திரங்களை
இறைவன் படைத்தது ஏன்?-அது
இன்றும் கூட
விடை தெரியா வினாவாகவும்
பொருள் புரியா புதிராகவும்
நாட்கள் நகர்கின்றன..!

எழுதியவர் : ajantha (7-Aug-14, 8:01 pm)
Tanglish : puthir
பார்வை : 126

மேலே