என் ப்ரியமானவளுக்கு
என் ப்ரியமானவளுக்கு
கரைதொடும்
அத்தனை அலைகளும்
ஏமாற்றமாய்தான் திரும்புகின்றன...!
கொலுசு சத்தம் கேட்டதும்
வந்திருப்பது நீதான் என நினைத்து...!!
அலைகளுக்கெப்படி தெரியும்
அவைகளை
ஏமாற்றத்தான்
நீ
என் தோளின் மீதமர்ந்து
ஊர்வலம் வருகிறாய் என்று...!!!