நான் முதல்வரானால்

இலவசங்கள் என்ற பெயரில்
இடைத்தரகர்கள் எல்லாம்
இலட்சாதிபதிகள் ஆகிறார்கள்..!
இனாமாப்பெரும் மக்களை தான்
இளச்சவாயன்கள் ஆக்கிறார்கள்..!

ஆகையால், இலவசங்களை ஒழித்து
என் மக்களின் சுய மரியாதையை
காப்பேன்..! நேர்மையான
இடைத்தரகர்கள் கொண்டு எனது
சேவையைச் செய்திடுவேன்..!

ஜாதிகள் என்றொன்று வேண்டாம்
இப்புவியில் யாவரும்- ஒன்றே
என்று சொல்லி முதலில் இடஒதிக்கிடுக்கு
முற்றுப்புள்ளி வைப்பேன்..!

அரசியல்வாதிகளெல்லாம் முடிவெடுக்கத்
தெரியாத முட்டாள்களில்லை..!
அவர்கள் எல்லாம் சாமர்த்தவாதிகள் ...,
சரியான முடிவெடுத்தால்
அரசியல் சம்பளம் தான் மிச்சம்..!
முடிவெடுக்கத் தவறினால்
சம்பளத்துடன் கிடைக்கும் சன்மான
கிம்பளமும் தொச்சம்..!

ஆகையால், சாமர்த்தவாதியாய்
நானிருக்க மாட்டேன் ..
சமத்துவனாய் மட்டுமே என்றும்
குரல் கொடுப்பேன் ..!

அரசியலின் அகராதியில் லஞ்சமெனும்
வார்த்தையை தகர்ப்பேன் என
பொய்மைக்கூற மாட்டேன்...!
ஏனெனில், கொடுப்பவர்களின்
கொட்டம் அடங்கினால் தான்
கேட்டு வாங்குபவர்களுக்கு என்
சட்டம் சவுக்கடிக்கொடுக்கும்...!

என் உறக்கம் கலைந்தது..!
அட இது கனவா?..

இதைக் கனவில் தான் நினைக்கணும்
இப்போது ..! கண்ட கனவெல்லாம்
நிஜமாவது எப்போது?..

உண்மையில் அரசியல் தாக்கம்
உள்ளவர்களெல்லாம்
இன்னும் டீக்கடைப் பெஞ்சில்
அமர்ந்து அரசியல் பேசுகிறார்கள்..!

ஆளுமைத் திறனற்றவர்கள் தான்
அரசவையில் அமர்ந்து
ஆட்சி செய்வதென்ற பெயரில்
நாட்டை நாசம் செய்கிறார்கள் ..!

எழுதியவர் : வாழ்க்கை (12-Aug-14, 3:57 pm)
சேர்த்தது : தாமோதரன்
பார்வை : 969

மேலே