பெண் கடவுளானால்

மான் தனித்து போனால்
வேட்டை மிருகம்தான் பாயும் !
ஆனால் இங்கு
பெண் தனித்து போனாலோ
வேட்டை தெரியாத மனித
மிருகம் கூட பாய்கிறது .
அவளால் உலகில் அறிமுகமாகி
சாகும் வரை அவளை
அறியாது சாகும் இனம்
ஆண் மட்டுமே !
மகள் ,தங்கை,மனைவி,அம்மா,
இத்தனை பெயர் இருந்தும் அவள்
ஆணின் முன் இரண்டாம் தர குடிதான் !
கடவுள் படைக்கும் தொழிலை
பெண்ணுக்கு தந்ததால்
பெண் கடவுளானால்
அவள் பெற்ற ஆணோ சாத்தானான்