வருந்தம் தருகிறதோ

வருந்தம் தருகிறதோ ...?

பூக்களின்
மென்மை ராணியே
அழகுகளின் ராணியே
அனிச்சம் பூவே ....!!!

அன்னப்பறவையே
அழகின் உருவமே
என்னவளின் பாத அழகு
நெருஞ்சிப்பழம் போல்
வருந்தம் தருகிறதோ ...?

திருக்குறள் : 1120

நலம்புனைந்துரைத்தல்

அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்.

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 40

எழுதியவர் : கே இனியவன் (12-Aug-14, 8:04 pm)
பார்வை : 114

மேலே