அழகான வாழ்க்கை ஆனந்தமாய்

விண்ணில் உள்ள வெண்ணிலவே
இம்மண்ணில் செய்த மாயமென்ன ?
நெஞ்சில் நிறைந்த தேவகானம்
மலர்தன்னில் மலர்வதென்ன ?

சுந்தர சுழற்சி கனம்தோறும்
என் வாழ்வில் சுழல்வதென்ன ?
மந்திர காட்டின் மயிலொன்று
என் மனதில் நடனிப்பதென்ன?

சித்தம் சூழ்ந்த வாழ்வதனில்
வான்காந்த மழை சாரலென்ன?
பெரும் யுத்தம் நேர்ந்தால் கூட
அடிநெஞ்சில் அமைந்த அமைதியென்ன ?

புத்தம் புதிய யுகமொன்று தினம்
தினம் புத்திக்குள் புகுவதென்ன ?
வீழும் சருகுகள் கூட உரமாய்
மீண்டும் சக்தி அடைவதென்ன ?

ஆசைகளின் அலை வேகம்
தனதலையை ஒடுக்கியதென்ன ?
வானவில்லின் நிறம் போலே
என் வாழ்வு மாறுவதென்ன ?

சுகதுக்கதின் சாம்ராஜ்யம்
மெல்ல மெல்லச் சரிவதென்ன ?
கண்ணீரின் கரிப்பு சுவைகூட
தித்திக்கும் இனிப்பாய் மாறியதென்ன ?

ஞானக்கனலின் தாக்கம்தான்
என்று புத்தி எண்ண,எண்ண !!!
ஆனந்த வாழ்க்கை பூரணமாய்
அழகாய் மின்னுவதென்ன ?....!!!!!.....


-(போட்டி கவிதை "அழகான வாழ்க்கை ஆனந்தமாய்")

என்றும் அன்புடன்
கார்த்திக்

எழுதியவர் : கார்த்திக் (திருநெல்வேலி ) (24-Aug-14, 4:20 pm)
பார்வை : 99

மேலே