கிறுக்கிய கவிதை

எதையோ நினைத்து
தனிமையில் இருந்த
என் கைகளில்
பேனா இருக்க,



தாள்களை வீணாக்கி
கிறுக்கல்கள் பல
கிறுக்கினேன் கிறுக்கியாய்!


அதை பார்த்த அனைவரும்
பாராட்டினர் கவிதை
அருமை என்று!


மனதில் நினைத்து சிரித்தேன்
கிறுக்கு நானா இல்லை
பாராட்டினவர்களா என்று!

எழுதியவர் : கௌசல்யா (24-Aug-14, 12:46 pm)
Tanglish : kirukkiya kavithai
பார்வை : 511

மேலே