அழகான வாழ்க்கை ஆனந்தமாய்
அழகான வாழ்க்கை ஆனந்தமாய் !
அழகான வாழ்க்கை ஆனந்தமாய்
என் கண் முன்னே விரியுதடி !
என் பொல்லாத காலத்தை
உன் பொன்னான காதலை
வென்றதடி !
புண்ணான கால்களுக்கு
மலர் பாதை தந்தது நீயடி !
வடியாத சோகம்
வாரியனைத்தது என்னை
துடியாக என்னை
மாற்றியது நீயடி !
அழகான வாழ்க்கை ஆனந்தமாய்
உன்னால
என் கண் முன்னே விரியுதடி !
திறக்காத கதவுகளும்
உன் சொல்லல் திறந்ததடி !
திரும்பும் எல்லாம்
உன் முகம் தெறியுதடி !
அழகான வாழ்க்கை உள்ளே
ஆனந்தமாய் ஆட்கொண்டது
நீயடி !
என்னை அங்கீகரித்தது நீயடி !
துறவியாய் இருந்தேன்
தனிமையில் நானும்
துணையாய் வந்தது நீயடி !
அழகான வாழ்க்கை ஆனந்தமாய்
உன்னால
என் கண் முன்னே விரியுதடி !
மரம் சேகரித்த
மழைத்துளியாய்
சொட்டு சொட்டாய்
அவள் நினைவு
கசியுதடி !
வாழ்வின் பொருள்
எடுப்பதில்லை கொடுப்பது
என்று உணர்த்தியது
நீயடி !
உன் தோளில் நானும்
என் தோளில் நீயும்
சாய்ந்தபடி
நாம் காலம் கழியட்டும் !
தாயின் வாசம்
உன் மடியில் நுகர்கிறேன்
நானடி !
தாரம் என்று சொன்னாலும்
என் தாய்தானடி !
அழகான வாழ்க்கை ஆனந்தமாய்
தொடரட்டும்