நம் காதலின் உயிர்ப்பு

நம் காதலின் உயிர்ப்பு....

நம் காதலின் உயிர்ப்பு....
காதலின் மகத்துவம்....
புரியாதடி ஊர் மக்களுக்கு.....
ஊர் வாயை மூட முடியாது ..
எதுவென்றாலும் பேசிட்டு ...
போகட்டும் .....!!!

ஊரவரின் பேச்சு ....
எம் காதலுக்கு மூச்சு ...
அவர்கள் பேச பேச தான்
நம் காதல் வளர்கிறது ..
என்பதை மறந்து விட்டார்கள் ...!!!

திருக்குறள் : 1141
+
அலரறிவுறுத்தல்
+
அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்
பலரறியார் பாக்கியத் தால்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 61

எழுதியவர் : கே இனியவன் (26-Aug-14, 11:48 am)
பார்வை : 46

மேலே