நானும் தமிழச்சியே

கால் சட்டை போட்டாலும்..
நுனி நாக்கில் ஆங்கிலம் பரதம் ஆடினாலும் ..
கூரான காலணிகள் அணிந்து சிங்கார நடையிட்டாலும் ..
மேற்கத்திய உணவுகளை ரசித்து சுவைத்தாலும்..
சக மனிதா
அறிந்து கொள்!!
தமிழனுக்கும் தமிழச்சிக்கும் பிறந்த தமிழ் ரசிகை நான்!!
சரீரத்தின் குருதியில் தமிழ் கலந்து
சிறு மூளையின் உயிருணக்களில் வளர்ந்து
உணர்வுகள் உரையாட நினைக்கையில்
நாவழி நழுவி ஓடுவது
என் தாய் மொழி தமிழ் மட்டுமே!!

ஆளை கண்டு எடை போடாதே,
உன் கருத்துகளே உன்னை ஏமாற்றும்
மூதாதையர் சொல் மறவாதே ,
தீர விசாரித்து நம்புவது ஞானம்!!
ஏளனம் செய்யாதே
நான் குடித்ததும் தமிழ் கலந்த தாய் பால் தான்!!

என் தமிழ் ரசிப்பு என் உயிரின் ஒரு பிரிவு
என் கவிதை என் தனியுரிமை
முடிந்தால் ரசி
காயபடுத்தி செல்லாதே!!
விரும்பினால் ஊக்கபடுத்து
விளைவதை நசுக்கி கொல்லாதே!!

என் போல் ஆங்கிலம் மட்டுமே விரும்பாத தமிழச்சிகள்
நிறைய உண்டு இத்தாய் திரு தமிழ் நாட்டிலே...

எழுதியவர் : சௌந்தர்யா (27-Aug-14, 1:17 am)
பார்வை : 243

மேலே