பாலபிசேகம்..
ஆலயத்துக்கு
போன உன் மேல்
யாரோ
குடத்துப் பாலை
எடுத்து ஊற்றி விட்டார்கள்
என கேள்விப்பட்டேன் .....
சேலையணிந்து கோவிலுக்கு
வராதே என்றால்
கேட்க மாட்டாயா...?
பிறகு எப்படி
உனக்கும் அம்மனுக்கும்
வித்தியாசம் கண்டுபிடிப்பது..?