அடிக் கள்ளி...

நேற்றைய
கனவில்
உன் இதழ்களை
கொஞ்சம் காயபடுத்தி
விட்டேன்..
இன்று காலை
உன் இதழோரம்
காயம் கண்டு பதறி
"என்னாச்சு ?" என்றேன்..
"உன்னாலதான் .." என்று
முறைத்து விட்டு போனாய்..
அடிக்கள்ளி..
நேற்று உனக்கும்
இதே கனவு தானா?....

எழுதியவர் : ஆனந்த பிரபு.கௌ (24-Mar-11, 1:37 am)
பார்வை : 368

மேலே