பஞ்சபூதங்கள்
நீர்...
இயற்கை அன்னையின்
ஆனந்த கண்ணீர்
நிலம்...
பூமா தேவி விரித்த
பச்சை கம்பளம்
காற்று...
எவர் கைக்கும் அடங்காத
உயிரினத்தின் சுவாச நாடி
ஆகாயம்...
கைக்கு எட்டாத
பஞ்சு மெத்தை
நெருப்பு...
தீண்ட முடியாத
வண்ணக்கலவை