சொர்கத்தின் வாசலில்

சொர்கத்தின் வாசலில்
வரிசையில் நின்றபோது
எக்கசக்க முனகல்கள்
முன்வரிசை ஒதுக்கியதில்

வாழ்க்கையில் சிறப்பு
அர்ச்சனை சீட்டே
வாங்காத ஏழைகளுக்கு
முதல்வரிசை ஒதுக்கியதற்கும்

பலமுறை தோற்றாலும்
பக்தியை கைவிடாமல்
நேர்வழி சென்றவருக்கு
முன்னுரிமை கிடைத்ததற்கும்

சிறுவயதிலே அனாதை
முத்திரை இடப்பட்டு
வாழ்வின் சுமையை
அணுவணுவாய் கடந்தவருக்கும்

கவனமாய் வளர்த்தும்
கருணை இன்றி
முதியோர் இல்லத்தில்
சேர்க்கப் பட்டவர்களுக்கும்

காசில்லாத காரணத்தால்
தன்னால் நிதமும்
எட்டியெட்டி உதைப்பட்ட
தினக்கூலி தொழிலார்களுக்கும்

தெருவோர மரங்கள்
தாகத்தால் துடித்தபோது
கெளரவம் பாராமல்
தண்ணீர் வார்த்தவர்களுக்கும்

கெட்ட வார்த்தைகளை
முடிந்தவரை உபயோகிக்கா
பிழைக்க தெரியாத
அப்பாவி மனிதர்களுக்கும்

சிறுசிறு வரிசையில்
முன் வரிசைக்கான
தகுதி கிடைத்து
கெளரவம் பெறுகையில்

பொறுத்துப் போனவர்கள்
பொருமித் தீர்த்தனர்
மேலுமொரு மிகப்பெரும்குழு
கண்ணீர் மட்டுமே சிந்தி
கெளரவம் பெற்றதற்காய்

ஆம்.. நெடுந்தொடர் மட்டும்
நிதமும் பார்த்து
பிறரின் கஷ்டத்திற்காய்
கண்ணீர் வடித்தவர்கள்
நின்றனர் நீ......ண்ட வரிசையில்

_ஆரோக்ய பிரிட்டோ

எழுதியவர் : ஆரோக்யா (7-Sep-14, 4:44 pm)
Tanglish : sorkathin vasalil
பார்வை : 55

மேலே