வானம் வசப்படும்,
இந்த முறையும் தோல்வியா..?
வலி தாங்க முடியவில்லையா..?
போ..., உட்கார்..,
முடிந்தவரை அழு..,
கண்கள் சிவந்து.,
கண்ணங்கள் ஊறி.,
உடல் தேம்பி.,
இனியும் கண்ணீர் இல்லை
எனும் அளவுக்கு அழு.,
என்ன..!
அழமாட்டாயா..?
அழுதால்
வெற்றி வெறி,
வெற்றி வேகம்..,
குறைந்துவிடுமா..?
யார் சொன்னது..?
நீ அழவில்லை என்றால்.
விவேகம்..,
நிம்மதி...,
புன்னகை..,
உறக்கம்..,
அத்துனையும் அல்லவா தொலைந்துவிடும்..!
அழு..,
அழுகை தோல்விக்கான கொண்டாட்டம்.,
அழு
முடிந்தவரை அழு.,
உன் கண்ணீர் தீர்ந்தபிறகு
உன்னை அறியாமல்
ஊற்றெடுக்கும் பல எண்ணங்கள்..,
எண்ணத்தை சீர்படுத்து...,
ஆராய்ந்து பார்.,
தவறை கண்டறி.,
இறுதியில்..,
எல்லா தவறுகளுக்கும் காரணம்
நீயாகவே இருப்பாய்.,
மாற்றத்தினை முதலில்
உன்னிடமிருந்தே தொடங்கு.,
கண்ணீரைத் துடை.,
நிமிர்ந்து பார்..,
இதோ..,
புதிய, தெளிவான பாதை
உனக்காக.,
ஓடு...,
விரைந்து ஓடு..,
அதே சமயம் நிதானமாய்.,
கண்களை மூடிக்கொண்டு
ஓடாதே.,
கற்கள் பல இடறிவிடும்.,
முன் ஒடுபவர்களை இடறிவிட்டு
ஓடாதே.,
உன் வேகம் குறையும்..,
குடும்பம் தன்னை உதறிவிட்டு
ஓடாதே.,
வெற்றி இனிக்காமல் போய்விடும்.,
நீ ஓடும் பாதையில்
முட்கள் இருக்கலாம்..,
வளைந்து ஓடு.,
தேவைப்பட்டால் இளைப்பாறு..,
புத்துணர்ச்சி பெறு.,
இலக்கு வானமே அயினும்
ஓடு.,
வானம் வசப்படும்..,