அழகான இராட்சசியே

ஒரு பார்வை என்னை பார்க்குரே
ஓராயிரம் முள் நெஞ்சை தைக்குதே....
சின்ன புன்னகை இதழில் தெறிக்குதே
அந்த சிரிப்பினில் உள்ளம் சிதையுதே....
தேன் சிந்த பேசி மயக்குரே
வண்ணத்துப் பூச்சியாய் பறந்து இரசிக்கிறேன்....
கால் கொலுசில் சங்கீதம் பூக்குதே
பூக்கும் இசைக் கேட்டே மெய் மறக்கிறேன்....
கண்ணால் தூண்டில் வீசுரே
காதல் மீனாய் வந்தே சிக்குறேன்...........
ஒரு பார்வை என்னை பார்க்குரே........
கலைந்து செல்லும் வான் மேகங்கள்
கருங்குழலைப் பார்த்து மழை தூவுது....
வளைந்திருக்கும் நெற்றி புருவங்கள்
இரு வானவில்லாய் தோனுது....
கட்டி தழுவும் விழி இமைகளோ
என்னுள் காய்ச்சல் அடிக்க வைக்குது....
கழுத்தில் விளையாடும் பவள மணியும்
பளிச்சிடும் வைரங்களாய் மின்னுதே....
மின்னல் கீற்றும் மின்மினி பூச்சியாகி
உந்தன் கண்களை வந்து சேருதே....
மின்னும் வெளிச்சத்திலே மில்லியன் நிலவும்
உன்னிடம் தோற்றுப் போகுதே...........
ஒரு பார்வை என்னை பார்க்குரே..........
நீ போகும் வழியெங்கும்
நிழலாய் உன்னோடு வந்திடுவேன்....
நடந்திடும் கால்கள் நோகதிருக்க
பூமி தோறும் பூக்களாய் பூத்திடுவேன்....
உன் மூச்சுக் காற்று தீண்டயில்
இந்த உலகம் முழுதையும் மறந்திடுவேன்....
விரல் தொடுகின்ற நொடியினிலே
மிரண்டு போய் எழுந்திடுவேன்....
நெஞ்சம் எனும் ஏட்டினிலே
காதல் ஓவியமாய் உன்னைத் தீட்டுவேன்....
அதனோடு சேர்ந்து வாழவே
என் உயிரையும் உதிரமாய் ஊற்றுவேன்........
ஒரு பார்வை என்னை பார்க்குரே..........

எழுதியவர் : இதயம் விஜய் (17-Sep-14, 6:04 pm)
சேர்த்தது : இதயம் விஜய்
பார்வை : 115

மேலே