வருணனின் வருகை
கரிய கார் மேகம் அசைந்திட...
மத்தளம் தான் முழங்கிட...
கண் படாமலிருக்க வெண் பொட்டிட்டு...
உன் பாதம் தரை தொட....
பச்சை பட்டு தான் விரிந்திட....
வருணனின் கையில் வடிந்திட்ட ஊற்றை....
வீதியில் பரப்பிட...
வருவாய் மழையாய்.....
-மூ.முத்துச்செல்வி