மதியால் மறக்க மாட்டேன் - இராஜ்குமார்

மதியால் மறக்க மாட்டேன்
==========================

எப்போதும் என்னில்
காதலாய் நீயே கலந்தாய்
ஒருபொழுதில் உந்தன்
நினைவில் நிழலாய் மிதக்க

இப்போதும் கரையில்
மணலாய் காய்ந்துப் போனேன்
முன்பொழுதில் உனையே
கடலில் அலையென ரசிக்க

தற்போதும் காற்றில்
உயிர்வளியாய் உலவி வருவேன்
நொடிபொழுதில் உனது
நுரையீரல் முழுக்க நுழைய

ஒருபோதும் மதியால்
சிந்தித்து மறக்க மாட்டேன்
கணபொழுதில் உந்தன்
வெறுப்பில் அன்பை விதைக்க

- இராஜ்குமார்

நாள் : 27 - 6 - 2011

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (19-Sep-14, 10:14 pm)
பார்வை : 122

மேலே