காதெலெனும் ஆழி அலை
பட்டுன்னு தான்
சொல்லிபுட்ட
பார்த்தவுடன்
விரும்புறேன்னு...
இலை வடிவு
இதயத்தை நீ
திரை வடிவில்
காட்டிபுட்ட...
இனி நானும்
என்ன செய்ய
ஏகத்துக்கும்
குளம்பிபுட்டேன்...
கல் எறிஞ்ச
மேகம் போல
மனம் கலஞ்சி
தானே போயிருச்சு...
நித்திரைய கலச்சிபுட்டு
நிம்மதிய தொலச்சிபுட்டு
இல மேல தண்ணி போல
இங்குமங்கும் அலையுறண்டி...
ஏங்கி நானும் காத்திருக்கேன்...
எப்ப வந்து
தாக்கிடுமோ
உன் காதல்
எனும் ஆழி அலை...
கம்மாக்கர
கருவேலைய
நம் காதலுக்கு சின்னமாக்க...