தயக்கத்தின் தலைவி நீயாம் - இராஜ்குமார்
தயக்கத்தின் தலைவி நீயாம்
=============================
விழிகள் எத்திசை நோக்கியும்
உந்தன் விழிகள் கிடைக்கவில்லை
தேடல் ஆயிரம் முடிந்தும்
உந்தன் முகத்தை பார்க்கவில்லை - ஆனால்
உன்னொற்றை சிணுங்கல் சொல்லுது
மனதின் மையப்புள்ளி நீயென்று...!!
பாடலில் பலவகை சரிந்தும்
உந்தன் குரலை கேட்கவில்லை
எழுத்தில் எண்ணம் அழிந்தும்
உந்தன் விரல் எழுதவில்லை - ஆனால்
உந்தன் வளையோசை சொல்லுது
இதயத்தின் இன்னிசை நீயென்று ..!!
ஆலய வேண்டுதல் அறிந்தும்
சிற்பம் உந்தன் தரிசனமில்லை
படிகளில் பயணம் முடிந்தும்
உந்தன் பாதச்சுவடே பதியவில்லை - ஆனால்
உந்தன் தாவணிவாசம் சொல்லுது
தயக்கத்தின் தலைவி நீயென்று
- இராஜ்குமார்
நாள் : 8 - 7 - 2011