பொறுமையை பெற்றெடுத்து பேரிட்டவர்கள்

பொறுத்து பொறுத்து
தினம் பொறுத்து பொறுத்து
மண்ணும் கண்டதுண்டோ
எமது பெண் இனம் கொண்ட
பொறுமையிலும் பெரிதாய்

எமது தன்னம்பிக்கையை
வேரோடு அறுத்தெறியும் துணிவு
வசைபாடும் நாவை
சுட்டுவிட துணிவதில்லை

எமது கற்பை இழந்ததற்கு தண்டனையாய்
மரணத்தை ஏற்கும் துணிவு
தீண்டிய விஷ நாகத்தின் தொண்டையை
பற்களால் கடித்து துப்பிவிட துணிவதில்லை

அவர்களின் எச்சில் போடும் சத்தம்
எமது பேச்சில் இருப்பதில்லை
எங்களுக்கு சொல்லி கொடுத்து வளர்த்ததும்
அப்படியோ என்செய்வோம் நாங்கள்

ஆயிரம் ஆண்கள் சூழ தினம்
என் வாழ்க்கை பயணம்
அத்தனை பேரின் போதைக்கும்
நான் ஒருத்தியே ..................
இதனுள் எம்இன சிறுமிகளும் அடக்கம்
வேதனை.. பெரும் வேதனை...
நாணத்தில் தலை நிமிர்ந்து
நடப்பதில்லை எம் இனம்

எதற்காக பட்டங்கள் பதவிகள் எமக்கு
கொஞ்சம் கொஞ்சமாக ஓர்
சுய தொழிலை சொல்லி தர
முயல்கிறது உரசி நின்று ஓர் உருவம்
வயது வித்யாசம் இருவரிலுமே கிடையாதாம்
தேடி தேடி வந்து வகுப்பெடுப்பது
அதில் சிறப்பு அட ச்சீ...
நெருங்கிய உறவுகளில் தொடங்கி
ஊர் தாண்டி உலகம்வரை
எமது ஆசான்கள்
வரம் என்பதா...
சாபம் என்பதா...

உடையணிந்து ஈர்த்தது நாங்களாம்
அவர்களின் புத்தியில் ஏற்பட்ட
பிழைக்கு காரணம் தேடுகிறார்கள்
எங்களிடமிருந்தே....
சிரிக்கத்தான் தோன்றுகிறது

மேடையேறி பெண்ணுரிமை பேச்சு
ஒரு சோடாவோடு எமது
உரிமை தாகம் தீர்ந்து போச்சு

மண்ணும் கண்டதுண்டோ
எமது பெண் இனம் கொண்ட
பொறுமையிலும் பெரிதாய்

தாவணி தொட்டவன்
தாடை பழுத்து பற்கள்
உதிர வேண்டாமா

காமம் சொல்லி கேலி செய்தவனை
பெற்றெடுத்த தாயின் கருவறையும்
காரி துப்பிட கேவளபடுத்த வேண்டாமா

இச்சைக்காய் தேகம் சிதைத்தவனை
தீண்டாமை இனமென உலகமறிய
செய்திட வேண்டாமா

நீ பொறுத்து பொறுத்து
உன் சகோதரிகளுக்கும் வழி விடுகிறாயோ
இந்த நாற்றம் மிகுந்த
அசிங்கத்தை மிதித்து
அவளும் நடக்க வேண்டுமா

எதுவரை உனது பொறுமை சொல்லடி
பொறுமையை பெற்றெடுத்து பேரிட்ட பெண்ணே
எதுவரை உனது பொறுமை நீளும்

எழுதியவர் : மணிமேகலை (24-Sep-14, 7:37 am)
பார்வை : 101

சிறந்த கவிதைகள்

மேலே