காதலித்துப் பார்

மரணத்தின் வாசலை நாடியவன்
இன்று உன் கால் கொலுசொலியில்
மயங்கி நின்றேன் ..
நானில்லாவிட்டால் செத்தா போய் விடுவாய்
என்று நீ கேட்ட கேள்வியிலேயே
செத்துத்தான் போனேனடி ..
உயிர்ப் பிச்சை அளித்திட்ட
உன்னை விட்டால்
இனி உதிரமும் இல்லை
என் நெஞ்சில் உனக்காக
வழிந்திடவே.!
.அத்தனையும் இழந்துதானே அள்ளி உன்னை
நான் சுமந்தேன் எந்தன் நெஞ்சில்..
ஒற்றை சொல்லாலே தள்ளி விட்டு
செல்லுகின்ற என் செங்கமலம் ..
இந்த சேற்றினை நீ மறந்திடலாம் ..
சுகம் பலவும் இனி நாடிடலாம்..
எத்தனைதான் சிறப்புடனே
எவர் வந்து உன் தோள் மீது கை போட..
வீழுமிவன் தோளிரண்டும் பூமியிலே ..
மெல்லச் சாகும் உடல் பின்னாலே!
என்னை காதலித்து பார் !
தெரியும் என் சேதி தன்னாலே!

எழுதியவர் : karuna (29-Sep-14, 5:59 pm)
Tanglish : kadhalitthu paar
பார்வை : 158

மேலே