தூது செல்லாயோ கிளியே

பச்சைக் கிளியே
பறந்து வந்தாயோ
என் பாடும் குரல் கேட்டு
ஓடி வந்தாயோ
உன் செவ்விதழ் திறந்து
தேன் தமிழில் சின்னதாய்
நீயும் ஒரு பாடல் பாடுவாயோ..!!

(கிளி) கீ===கீ==கீ

அடடா அடடா அருமையடி
உன் கீதம் புதுமையடி கீ கீ
என்று நீ இசைப்பதைக் கேட்டதுமே
கிறங்கியே போனதடி என் இதயமது...!!

நீ முந்தா நாத்துப் பார்த்தாயா
என் மச்சான் வந்தாராம்
பச்சைக்கிளியே அவர் ஓரப்பார்வையை
நீ மெச்சுகிளியே....!!!!

ஓடை நீரின் அருகே நான் ஒருத்தி
ஓயாமல் காத்திருக்கும் செம்பருத்தி
அதை நீ சென்று சொல்லி விடு தனியே
அவரை நிறுத்தி....!!!

அவர் என் காதில் கிசு கிசுத்த
கதை கேட்டு என் தொலை பேசியும்
வெட்கம் கொண்ட கதையைக் கூறி
விடு கவி வரியில்...!!!

ஓடை நீரும் சல சலக்க
வாடைக் காற்றும் குளு குளுக்க
முல்லை மலரின் வாசமோ என்னை
மயக்க குயில் ஓசையும் காதல் கீதம்
போல் ஒலிக்க பேதை என் நெஞ்சம்
அவர் மஞ்சம் தேடுதடி...!!!

தூது போ தூதுபோ பச்சைக் கிளியே
என் மச்சான் கொடுப்பார் முக் கனியே
நீ மொச்சை கொட்டை உண்ணும் முன்
என் இச்சை அத்தனையையும் கூறிவிடு
பெட்டைக் கிளியே.....!!!

எழுதியவர் : கவிக்குயில் இ.சாந்தகலா (1-Oct-14, 1:21 pm)
பார்வை : 158

மேலே