காதலிக்கு ஓர் கடிதம் 2

ம்ம்ம்..
என்ன ரொம்ப ஆவலோடு...
கடிதம் எதிர்பார்த்து...
காத்துகொண்டு இருக்கிறாயோ.. !?
ஒன்றுமில்லையடி...
இது என்னோட எதிர்பார்ப்பு..! :))

உலை நீரைப்போல...
காதல் உணர்வுகள் ..
பொங்கி வந்தாலும்..
வார்த்தை அரிசிகள்..
கிடைக்க வில்லை..
அதனால்..
கவிதை பொங்கல்..
படைக்க வில்லை ..
உனக்கு..!!
என்ன அப்படி பார்க்கிறாய்..?
மூன்று பகல்கள்..மூன்று இரவுகள் .. உனக்காக யோசிச்சு...எழுதியது..!!:))

என்ன எழுத சொல்லுகிறாய் ..?
உனக்கு தனியாக
எழுத வேண்டியதை..
அதுவும்..
பொதுவான இடத்தில்..!

வந்து ..பார்த்து விட்டு போனாள்..!?
அவள் நீயா..? அறியேன்..!
ஆனால்..
அவள் சோகமிக்க ஏக்க பார்வையில் ..
என்னை விழுங்கி விட்டு போனாள்..
எனது சோகங்களையும்..
ஏக்கங்களையும் சேர்த்து...!!
அதனால்தான் என்னவோ..
தொடர்ந்து எழுத வேண்டிய கடிதங்கள்..
கொஞ்சம் மௌனமாகவே எழுதப்பட்டது..!

ம்ம்ம்..
என்ன செய்ய..!?
என் மனம் அங்கே..
காதல் அருவியாய் கொட்டுகிறது..
உனது கவிதைகள் மூலம்..

உன் மனம் இங்கே..
"மக்கு"..!?
இல்லை.. இல்லை ..
அறிவு கொழுந்து..
எழுதியது என்னவோ..
ஒரே ஒரு வார்த்தை..
"உயிரே" என்று..!!

உன்னை கண்ட நாளில்..
உன்னால்..
என் மனதில் விழுந்த..
அந்த காதல் விதை..
இன்னும்...
"இரண்டு இலைகள் விட்ட"
வளர்ச்சியோடே இருக்கிறது..!!

அது..!
உன்னால்..
வளர்க்கப்படவும் இல்லை..!
அழிக்கப்படவும் இல்லை...!!

பேருந்து உள்ளேயிருந்து..
பெருந்துவை தள்ளுவது போல்..
நீ..
என்னுள்ளேயே இருந்து கொண்டு
உனது நினைவுகளை..
வெளி தள்ள (அழிக்க )போராடுகிறாய்..?
"ஐயோ பாவம்.."
உன்னை சொல்லவில்லையடி கண்ணே..!
நம் ஆதரவற்று கிடக்கும்..
நம் காதலையும்..
நம் வாழ்க்கையையும் .
பார்த்து சொன்னது...!!


தொடருவேன்...அன்பே..!!

எழுதியவர் : ஸ்ரீ (9-Oct-14, 9:45 pm)
சேர்த்தது : ஸ்ரீ சரவணன் (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 712

மேலே