நீயும் நானும்

ஒவ்வொரு நாள் காலையும்
உன் முகம் கண்ட பின் தான்
புலர்ந்தது- எனக்கு !
நீ நடந்த போதும் ..
என்னுடன் பேசிய போதும்..
என்னை பார்த்து
புன்னகை பூத்த போதும்
ஒவ்வொரு நாளும்
நான் கரைந்து கொண்டிருந்தேன்..
என்னில் நீ
நிறைந்து கொண்டிருந்தாய்!
என் மீது விழுந்த உன் ஒவ்வொரு
பார்வை மழையிலும்
நிமிர்ந்தேன்!
எதிரில் உன் காதல்
தூரத்து வானவில்லாக..!
இலையுதிர்ந்த மரமாயிருந்தேன் ..
இனி வசந்தம் என்று உணர்ந்தேன்!
இன்று..
என்னில் நான் இல்லை..
இருப்பதெல்லாம் நீயே!
இனி..
நீ ..கரைந்து..
உன்னில் நான் நிறைந்து..
நீ...
நான் ஆவது எப்போது?