நிழலுக்கு நேர்ந்த அவலம்

என் ஊர் சாலைகளின்
பள்ளம் மேடுகள்
என்னை மட்டும் குலுக்கி
செல்லும் என நான்
நினைத்தால் -அவை
என் நிழலையும்
கூடவே சேர்த்து ஆட
வைத்து அகமகிழ்கிறது !!
சாலையில் உள்ள குழிகளில்
தேங்கி உள்ள தண்ணீர் கூட
பள்ளம் மேடுகளை மறைத்து
என் கண்களை கட்டி
பல்லாங்குழி விளையாடுகிறது!!
செல்லும் சாலையில் தான்
சங்கடங்கள் மிகுதி என்று
மேலே பார்த்தால் தாழ தொங்கும்
மின்கம்பம் ஐயையோ
பயங்கரம் இது சாலையா?
இல்லை நம்மைக்
கொல்ல வந்த பாதையா?
வேகம் விவேகம் அன்று -அது
மிக நன்று தான் அதைவிட
சாலை நம்மை சவம் ஆக்காமல்
இருப்பது மிகமிக
நன்ன்ன்னன்ன்று!!!!!!