கவிஞன்
படைக்கும்
கடவுள்
பிரம்மாவின்
முதல் பாகம் - இவன்
அழகையும்
அழுகையையும்
அழகாய்
பிரித்தெடுக்கும்
அன்னப் பறவை
கனவுகளின்
ஊர்வலத்தை
கண் முன்னே
கொண்டு வரும்
கண்ணாடி - இவன்
தியாகத்தையும்
தீவிரவாதத்தையும்
திடமாய்
சொல்லிடும்
தின முரசு
சுதந்திர
வேட்கையில்
போர் முரசு - இவன்
பொங்கிடும்
அன்பினில்
தேனிலவு
வர்ணனை
என்பது
உயிர்மூச்சு - இவன்
வரிகளில்
வாழுது
மொழி காப்பு