பள்ளி

பேதையாய் நான் உன்னிடம் வந்தேன்
என்னை மேதையாய் மாற்றியது நீயே!
மழலை மாறாமல் நான் உன்னிடம் வந்தேன்
என் மடமையை மறக்கச் செய்தது நீயே!
சோம்பேறியாய் நான் உன்னிடம் வந்தேன்
எனக்கு சுறுசுறுப்பின் பயனை புரியவைத்தது நீயே!
களர் நிலமாய் நான் உன்னிடம் வந்தேன்
பயிர் செய்யும் நன்நிலமாய் மாற்றியது நீயே!
கனவுகளோடு நான் உன்னிடம் வந்தேன்
என் கனவுகளை நிறைவேறச் செய்தது நீயே!
துணிவற்று நான் உன்னிடம் வந்தேன்
எனக்கு துணிவை கற்பித்தது நீயே!
திறன் இருளில்மறைந்திருந்த நிலையில் நான் உன்னிடம் வந்தேன்
என் திறங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது நீயே!
என் மனதில் நல்லெண்ணத்தை விதைத்தது நீயே!
விதை வளர்ந்து நல்மரமாய் நிற்பதும் உன்னாலேயே!
துன்பத்தில் என்னை அரவணைத்து ஆதரவு தந்தாய்
இன்று இன்பம் காணும் நிமிடத்தில் மறைந்து நின்றாய்
என்னை பேணி வளர்த்த நீயும் என் அன்னையே !
என் அறிவன்னையே!

எழுதியவர் : திவ்யா.பி (20-Oct-14, 8:44 pm)
சேர்த்தது : p divya
Tanglish : palli
பார்வை : 116

மேலே