தோற்றினும் முயற்சி செய் போட்டிக்கவிதை

விழுவதாய் எழுவதும்
எழுவதாய் வீழ்வதும்தான்
வாழ்க்கை...

இங்கே,
முயற்சியே நிரந்தரம்
முயல்வதால் விளைந்திடும்
புது சரித்திரம் ..

வாழ்விலே ,
வெல்பவன் வாழ்கிறான்
தோற்பவன் வளர்கிறான்..
முயற்சியோடு முனைந்தால்
வலிகளில் கூட விளையும்
வெற்றிக்கான வழிகள்...

கலைத்து போகாதே !
முயற்சியோடு
வலிகளை களைந்து ,
தடைகளை கடந்து போ...

தோல்வி எனும் வியர்வை
பூத்துக்கொண்டேதான் இருக்கும் ..
முயற்சி எனும் காற்றாய்
வீசிக்கொண்டேயிறு - அப்போதுதான்
வெற்றி எனும் புத்துணர்வு
உன்னோடே நிலைக்கும்...

முயன்றால் முடியாதது இல்லை
நம் முயற்சிக்கு
வானமே எல்லை..

இமயம் என்ன உயரம் !
அதைத் தாண்டியும்
நம் புகழ் உயரும் !!
விடாமுயற்சி நம்மிடமிருந்தால்..

தோல்வியைக் கண்டு துவழாதே!
அது,
வெற்றியின் முதற்படி மறவாதே...

முயற்சி ஒரு அகல்விளக்கு
அதை ஏற்றி நீ
தோல்வியின் சோர்வினை விலக்கு..
உனக்காக காத்திருக்கும்
எப்போதும் ஒரு
புது இலக்கு ..
உன்னாலே விடியவேண்டும்
இனி,
விடியலின் கிழக்கு...

பாதையோடு வரும் தோல்வி !
பாதையாக வரவேண்டும் முயற்சி !!
பாதியில் மறைந்திடும் தோல்வி..
பரிதியாய் மலரவேண்டும் முயற்சி...

தோல்வி வரும்
மீண்டும்! மீண்டும்!!
தோற்றினும் முயற்சி செய்!!!
முயற்சி ஒன்றே
தோல்வியை வெல்லும் வரம்...

தோற்றினும் முயற்சி செய்!!!
விடாமுயற்சியே
வெற்றியின் ரகசியம்....

எழுதியவர் : சீ. கவிதா . முதுகலை உளவிய (23-Oct-14, 10:50 pm)
பார்வை : 218

மேலே