பால் - தமிழகம்

காதலிச்ச பையன்ன கண்ணாலம்
கட்டிகிட்ட சிறுக்கி சீமாட்டி
அவன் அரசுக்கு வருமானம் தீட்ட
தினம் மதுகடையிலே நிக்குறாண்டி

மலடி சொல்ல பழிக்க
இப்போ நெறமாசமா நிக்குறியே
புள்ள பொறக்கும் சமயத்திலும்
அப்பனுக்கு நினைவில்லையே

சிறுக்கி மவ சிறுக்கி நீ
பெத்தெடுத்தது பொம்பள புள்ளையடி
புள்ளைய பெத்து போட்டு
நீயும் சாமிக்கிட்ட போயிட்ட

தாயில்லா புள்ளைக்கு
பசும்பாலே தஞ்சமாச்சு
நகரத்து வாசலிலே
பசும்பாலுக்கு பாடாப்போச்சு

கவரு பாலு விலையைகேட்டு
புள்ளைக்கு கல்லிப்பாலே கடைசியாச்சு....

எழுதியவர் : மோனி (29-Oct-14, 1:52 pm)
பார்வை : 63

மேலே