விலைமாது

அந்தி மழை சுகமாய்
அழகாய் வளர்ந்தவள் !!
ஆண்டவன் செய்த சதி
ஆண்களால் சிறையானேன் !!

ஆதங்கத்தை சொல்லி
அழுவதற்கும் , ஆறுதல்
தருவதற்கும் யாருமில்லை
உறவென்று சொல்லி !!

வயிற்று பசிக்காக
வந்தவர்களுக்கெல்லாம் இரையானேன்
வாழும் தெய்வங்கள் வீட்டில் குடியிருக்க
வாடிக்கையாளர்கள் ஆனது ஏனோ ?

இன்பத்தை அவர்கள் அடைய
இருளிலே எங்களை தள்ள
விருப்பமின்றி அசைந்து
இசைந்து அணிச்சையை
இழந்தது இந்த உடல் !!

வெப்பம் இல்லா இருளில்
வெந்து தான் போகிறோம்
விழிகளில் கண்ணீரை துடைக்க
விடியலும் வருமோ ??

எழுதியவர் : யாதிதா (31-Oct-14, 12:26 pm)
பார்வை : 170

மேலே