இல்லை
நன்மையையும் தீமையும்
இனத்தில் இல்லை
ஜாதியும் மதமும்
இரத்தத்தில் இல்லை
பசியும் வறுமையும்
கருவில் இல்லை
இன்பமும் துன்பமும்
வயதில் இல்லை
அழகும் அறிவும்
முகத்தில் இல்லை
காதலும் காமமும்
இளமையில் இல்லை
இல்லாமையை நீக்கிவிட்டால்
இனி எதுவும் இல்லை.